தாம் நினைப்பதனைப் போன்று தேர்தல் நடத்த
முடியாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அரசியல் சாசன, நிறைவேற்று அதிகாரம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமையவே
தேர்தல் நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் எதிர்வரும் செப்டம்பர் மாதம்
தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட போதிலும், இது வரையில் தமக்கு
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்
குறிப்பிட்டுள்ளார். 2012ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இணையத்தில்
பிரசூரிக்கப்பட்டுள்ளதாகவும், 2013ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இன்னமும்
இணையத்தில் வெளியிடப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment