Monday, May 13

"மகாசென்" புயலின் பெயரை மாற்றுமாறு பௌத்த அமைப்புக்கள் போர்க்கொடி


Cycloneஇலங்கையின் மேற்கு கடற்பிராந்தியத்தில் தற்போது நிலவும் புயல் சின்னத்துக்கு மகாசென் என்று பெயரிடப்பட்டுள்ளமைக்கு பௌத்த அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
மகாசென் என்ற அனுராதபுர ராஜதானியை ஆண்ட மன்னனின் பெயரை இந்த புயல் சின்னத்துக்கு வைத்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்று வடக்கின் பௌத்த தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மகாசென், ஒருபோதும் புயல் போன்று செயற்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கை வானிலை அவதான மையம் மகாசென் புயலின் பெயரை மாற்றியமைக்குமாறு புதுடில்லியில் உள்ள தென்னாசிய வானிலை மையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வானிலை அவதான மைய பணிப்பாளர் எஸ்.எச்.காரியவசம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment