Saturday, April 6

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் இம்முறை அதிகரிப்பு

 
நாடளாவிய ரீதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு  க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றியோரில் 64 வீதமான மாணவர்கள் உயர்தரத்திற்கு  தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.
 
இது கடந்த 2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  4% அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
கொழும்பில் பரீட்சைக்கு தோற்றியோரில் 73.2 வீதமானோரும், குருணாகல் மற்றும் காலியில் முறையே 68.3 மற்றும் 68.19 வீதமானோரும் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
இம்முறை 4500 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு பெறுபேறுகளில்  3900 பேர் மட்டுமே 9 ஏ சித்திகளை பெற்றிருந்தனர்.
 
இதேபோல் பரீட்சையில் தோல்வியடைந்தோரின் வீதமும் 2011 ஆம் ஆண்டில் 4.7 இலிருந்து4.1 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment