Monday, April 29

வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களை இணைக்கும் புதிய பொருளாதார வலயம்!


மதவாச்சி, வவுனியா, கெபித்திகொல்லாவ, வாஹல்கட, புல்மோட்டை , பதவிய ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் புதிய பொருளாதார வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விவசாயம். கடற்றொழில் உற்பத்திகள் ஆகியவற்றிற்கு அதிக விலையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மதவாச்சி நகரை கேந்திரமாக வைத்து, புதிய பொருளாதார மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படுவதுடன், உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்காக பல்வேறு வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளது.

பல்வேறு காரணங்களினால் செயலிழந்துள்ள மதவாச்சி, பொருளாதார மத்திய நிலையத்தின் நிர்மாணப்பணிகள், துரிதப்படுத்தப்படவுள்ளதாக மதவாச்சி பிரதேச சபையின் தலைவர் கே.சி.மென்டிஸ் தெரிவித்தார். வடமத்திய மாகாண சபை இதற்கான நிதியை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment