Sunday, April 7

முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் அமெரிக்காவின் அறிவிப்பு விரைவில்

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் தொடர்பில்  அமெரிக்க தூதுவராலயம்  கவனம் செலுத்தி வருவதாகவும்  இந்த பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அறிவிப்பொன்று விரைவில் வெளியிடவுள்ளது என அமெரிக்க தூதுவராலய ஊடக பிரிவின் பொருப்பாளர் கிரிரொபர் டீல் தெரிவித்தார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலயத்தின் அனுசரணையுடன் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு சிலாபத்தில் நேற்றும் இன்றும் இடம்பெற்றுவருகிறது.  இதன் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களினால் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவை தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை விரைவில் வெளியிடும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment