Monday, April 29

கொழும்பில் சுமார் 300 உணவகங்களுக்கு பூட்டு

7வழங்கப் படவேண்டிய உரிய தரத்தில் நுகர்வோருக்கு உணவு பொருட்களை விநியோகம் செய்யத்தவறிய, கொழும்பு மாநகர எலையினுள் அமைந்துள்ள சுமார் 300 உணவகங்களை மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொழும்பு நகர சபையின் மக்கள் சுகாதார பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த உணவகங்கள் அடிப்படை சுகாதர வசதிகளையேனும் கொண்டிராமல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இவற்றுள்பல, விற்பனை சான்றிதழ்களையும் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் குறித்த உணவகங்கள் தொடர்பான ஆரம்பகட்ட சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு நகர சபையின் பொது மக்கள் சுகாதார பிரிவு தலைவர் பிரதீப் காரியவசம்  தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment