Wednesday, March 27

தேசிய கிரிக்கெட் அணியில் அமைச்சர் கெஹெலியவின் மகன்

பங்களாதேஷுடனான 20 - 20 கிரிக்கெட் தொடருக்கான அணியியில் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனான ரமித்  ரம்புக்வெல்ல இடம்பிடித்துள்ளார்.

எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில்  இறுதி 11 பேர் கொண்ட அணியில் அவர் பெரும்பாலும்  இடம்பிடிப்பார் என தெரிகிறது.

இன்றைய தினம் கிரிக்கட் சபை வெளியிட்டுள்ள குறித்த தொடருக்கான 15 பேர் கொண்ட அணியிலேயே ரமித் ரம்புக்வெல்ல இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment