Monday, May 7

பெண்ணை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு கைது


பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைபாட்டை அடுத்த பொலிஸார் இந்த பிக்குவை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரான குறித்த பிக்கு, போலியான பெயரில் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதை அறிந்த பெண் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment