Monday, May 7

வணிகர்களாக வந்த முஸ்லிம்கள் தமிழ், சிங்களப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தனர்: தம்புள்ளை தேரர்

 
 
தம்புள்ளை பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை. அரசாங்கமும் இது தொடர்பில் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இந்நிலையில் பள்ளிவாசல் விவகாரத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை என்று தம்புள்ளை ரங்கிரி விஹாரையின் பிரதம பிக்கு இனாமலுவே சுமங்கல தேரர் எச்சரித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.

இலங்கையில் பௌத்தம் 2 300 வருட வரலாற்றைக்கொண்டது. இஸ்லாமியர்கள், இலங்கைக்கு வணிகத்துக்காகவே வந்தனர். ஆண்கள் மாத்திரமே இங்கு வந்தனர். பின்னர் இங்குள்ள சிங்கள மற்றும் தமிழ்ப் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டனர்.
இதுவே அவர்களின் வரலாறு எனவே அவர்கள் இங்கு வந்து தமது வரலாற்றை காட்டமுடியாது. தம்புள்ளை விஹாரை உலகத்தின் முக்கிய இடங்களில் ஒன்றாக பதிவு செய்யப்படடுள்ளது
இதனை முஸ்லிம்கள் (தம்பிகள்) குழப்பியடிக்க பார்க்கின்றனர்.
அதற்கு இடம்தரமுடியாது. உலகம் முழுவதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவிவருகிறது. ஆனால் பௌத்த அடிப்படைவாதம் எங்கும் இல்லை.
இலங்கையில் 14 மில்லியன் பௌத்தர்கள் உள்ளனர். முஸ்லிம்கள் எத்தனை பேர் உள்ளனர்.தாய்லாந்து, மியன்மார் ஆகிய நாடுகளில் பௌத்தர்கள் அதிகமாக உள்ளனர். வத்திக்கானில் கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளமையால் அது கிறிஸ்தவ நாடு என்று கொள்ளப்படுகிறது.
மத்திய கிழக்கில் சில நாடுகள் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ளமையால் அவை முஸ்லிம் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
எனவே இலங்கையில் வந்து பௌத்த கலாசாரத்துக்கு மத்தியில் தம்முடைய வரலாற்றை முஸ்லிம்கள் நிலைநாட்ட நினைப்பது கொள்ளையாகவே இருக்கும் என்று இனாமலுவே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், குறித்த பள்ளிவாசல் அகற்றப்படமாட்டாது என்று கூறுகிறார். ஆனால் இலங்கையில் இரண்டாவது பிரஜையாக உள்ள பிரதமர் டி எம் ஜயரட்ன, பள்ளிவாசலுக்கு வேறு இடம் ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தேரரிடம் கேட்டபோதும், ஜனக பண்டார தென்னக்கோன் ஒரு பொலிஸ்காரராக இருந்தவர். எனவே அவர் தமது பாணியில் பேசுகிறார். அவர் நாடாளுமன்றத்துக்கு அவருடைய தந்தையின் வாக்குகளின் மூலமே தெரிவானார் எனவே அவரின் பேச்சை பௌத்தர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment