Wednesday, May 9

57 ஆயிரம் சிகரட்டுகளைக் கடத்திய முஸ்லிம் பெண் கைது!

சவூதிஅரேபியாவிலிருந்து இன்று காலை 11 மணியளவில் வந்த விமானத்தில் 57 ஆயிரம் சிகரட்டுகளைக் கடத்தி வந்த முஸ்லிம் பெண்ணொருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பாணந்துறையைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். துருக்கியில் தயாரிக்கப்பட்ட ரூபா 30 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளையே குறித்த பெண் கடத்தி வந்துள்ளார்.

No comments:

Post a Comment