Wednesday, July 20

இது இவருக்கு தேவையா? "முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழர் இந்த நாட்டில் வாழமுடியாது! பாராளுமன்றத்தில் அஸ்வர்

[ புதன்கிழமை, 20 யூலை 2011, 08:36.08 AM GMT ]
முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ முடியாது என்று ஆளுந்தரப்பு எம்.பி.யான ஏ.எச்.எம்.அஸ்வர் நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கடன் இணக்கக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளை அங்கீகரிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே அஷ்வர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
முஸ்லிம்களின் பங்களிப்பு இல்லாமல் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ முடியாது.
அரபு உலகினதும் முஸ்லிம் நாடுகளினதும் நண்பனாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருக்கிறார். எனினும் அதனை சீர்குலைத்து அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க எதிர்க்கட்சியினர் சதித்திட்டம் தீட்டுகின்றனர்.
எவ்வாறியிருப்பினும் இலங்கையிலுள்ள அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதியை அதிலிருந்து காப்பாற்றுவார்கள் என்று அவர் இதன்போது கூறினார்.

No comments:

Post a Comment