Friday, December 2

இலங்கையில் நான்கு மாவட்டங்களில் மட்டும் 40ஆயிரம் பாலியல் தொழிலாளிகள்!- ஐக்கிய தேசிய கட்சி


இலங்கையில் மாதாந்தம் 2கிலோ ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகவும், நான்கு மாவட்டங்களில் மாத்திரம் 40ஆயிரம் பாலியல் தொழிலாளிகள் காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபிர் காசீம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று புதன்கிழமை (30.11.2011) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
மேலும் அவர் தெரிவிக்கையில்,  

பாதாள உலகக் குழுத் தலைவர் ஜலீல் மொஹமட் பெரோஸ் கடத்தப்பட்டார்


பாதாள உலகக் குழுத் தலைவர் மொஹமட் ஜலீல் மொஹமட் பெரோஸ் எனப்படும் பெரோஸ் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெரோஸ் நேற்று வியாழக்கிழமை நீர்கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, December 1

முஸ்லிம் பெண்களின் உடை பற்றிய வரைவிலக் கணம் கோரப்படும்

முஸ்லிம் பெண்களின் உடையான ஹிஜாப் தொடர்பில் முஸ்லிம் அல்லாத சில பாடசாலைகளில் மாணவர்களும், முஸ்லிம் பெண் ஆசிரியர்களும் இஸ்லாமிய  உடையணிவதில் பல சந்தர்பங்களில் எதிர்ப்பையும் வற்புறுத்தல்களையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிவரும் செய்திகள் மூலம் எமக்கு தெளிவாக அறியமுடியுமாக உள்ளது.
இந்த தடைகளும் வற்புறுத்தல்களும் முஸ்லிம் மாணவியர் ஆசிரியர் அணியும் வெவ்வேறு விதமான உடைகளுக்கு எதிராகவுள்ளது. சிலர் தலையை மட்டும் மறைத்து சாரியுடுத்தி செல்கின்றனர், சிலர் ஹிஜாப் அபாயா உடையில் செல்கின்றனர், இன்னும் ஒரு சிலர் நிகாப் அணிந்து முழுமையாக தங்களை மறைத்து செல்கின்றனர். இந்த வகையில் அண்மையில் தென்பகுதி சிங்கள பாடசாலை ஒன்றுக்கு நிகாப் அணிந்து செல்லும் முஸ்லிம் ஆசிரியர் ஒருவரை பாடசாலைக்கு முகத்தை மூடி நிகாப் அணித்து வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தெரிய வருகின்றது.  இது தொடர்பாக விடயத்துடன் தொடர்ப்பு பட்ட அரச அதிகாரி ஒருவர்  வழங்கிய தகவலை இங்கு தருகின்றோம்.

மாளிகாவத்தை மையவாடியை கபளீகரம் செய்ய தனியார் கம்பனி முயற்சி



மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோத கட்டிட நிர்மாணப் பணிகளுக்காக தனியார் கம்னியொன்று மண் அகழ்வுகளில் ஈடுபட்டுள்ளதாக கொம்பனித்தெரு பள்ளிவாசல் நிர்வாக சபை அறிவித்துள்ளது.
 

கலாநிதி காமில் ஆஸாத் காலமானார்



Janasa Message logoபேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி எம்.என்.எம். காமில் ஆஸாத் காலமானார். அவரது ஜனாஸா இன்று (01.12.2011) மாலை 4.00 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

குறைந்தளவு லஞ்சம் பெறும் நாடுகளில் இலங்கைக்கு 86வது இடம், 1ம் இடத்தில் நியூசிலாந்து



குறைந்தளவு லஞ்சம் பெறும் நாடுகளில் இலங்கைக்கு 86வது இடம், 1ம் இடத்தில் நியூசிலாந்து




ஊழல் கண்காணிப்பு சர்வதேச அமையம் வெளியிட்டுள்ள குறைந்த அளவு லஞ்சம் வாங்கும் நாடுகள் குறித்த 2011ம் ஆண்டு அறிக்கையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.

2010ம் ஆண்டு அறிக்கையில் 91வது இடத்தைப் பிடித்த இலங்கை 2011ம் ஆண்டு அறிக்கையில் மூன்று இடங்கள் முன்னோக்கி 86வது இடத்தைப் பிடித்துள்ளது.

அறிக்கையின் படி இலங்கை 3.3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

178 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இக்கணிப்பீட்டில் இலங்கையுடன் 86வது இடத்தை ஜமேக்கா. பனாமா, பல்கீரியா மற்றும் சேர்பியா ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

இவ்வறிக்கையில் இந்தியா 95வது இடத்திலும் சீனா 75வது இடத்திலும் உள்ளதுடன் முதல் இடத்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான் பாதுகாப்பு அமைச்சர்


November 30, 2011

தெஹ்ரான்: இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.

வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மடையர்களின் சாம்ரச்சியமான பாராளுமன்றம் :22,500 தேங்காய்கள் கடலில் போடப்பட்டது உண்மையே – அமைச்சர் ஜோன்ஸ்டன்


Dayasiri-Jonston 
கடந்த வருடம் 688,506 ரூபா பெறுமதியான 22,500 தேங்காய்கள் கடலில் போடப்பட்டன என உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.தே.க. எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கை சிறுவர்களை வெளிநாடுகளுக்கு விற்ற கிறிஸ்தவ கன்னியாஸ்திரி கைது



கல்கத்தாவில் அன்னை திரேசாவினால் ஆரம்பிக்கப்பட்ட மிசனரியினரின் (Missionaries of Charity convent) கொழும்பு கிளையின் கன்னியாஸ்திரி மடம் ஒன்றை சேர்ந்த அருட்சகோதரி ஒருவர் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்று வந்த சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்றும் நாளை நீதிமன்றில் நிறுத்தப்படுவார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குர்ஆன் மத்ரஸாவை மூடுமாறு சிங்கள பேரினவாதிகள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)



கொழும்பு - தெஹிவளை கல்வல வீதியில் அமைந்துள்ள சிறுவர் மதரஸா ஒன்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. தெஹிவளை பிரதேசத்தின் கல்வல வீதி மிருகக்காட்சி சாலைக்கு பின்புறம் அமைந்துள்ள சிறுவர் மதரஸாவாகவும் , மஸ்ஜித்தாகவும் இயங்கிவந்த கட்டடத்திற்கு எதிராகவே அந்த ஆர்ப்பாட்டம் பெளத்த பிக்குகள் தலைமையில் இடம்பெற்றுள்ளது .

குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டடம் என்றும், அனுமதி பெறாமல் மஸ்ஜித்தாக இயங்குவதாகவும் கூறியே அதற்கு எதிராக ஆர்பாட்டம்  மேற்கொள்ளபட்டுள்ளது.  பெளத்த பிக்குகள் தலைமையில் பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டம் குறித்த மதரஸாவை சூழ்ந்து அங்கு நுழைந்துள்ளது எனினும் போலீசார் அதை தடுத்து நிறுத்தியுள்ளனர் என்று அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த மதரஸா 140 பேர்ச் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் சிறிய மதரஸாவாக இயங்கி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.