Wednesday, June 5

துந்துவை மகா வித்தியாலயத்திற்கு அஸ்வர் பார்வையாளர் அரங்கு (படங்கள் இணைப்பு)


பெந்தோட்ட துந்துவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் இன்று (04) 'ஏ.எச்.எம். அஸ்வர் பார்வையாளர் அரங்'கினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வித்தியாலய அதிபர்ஏ.எச்.எம். ஸம்சுத்தீன் மற்றும் தென் மாகாணத் தமிழ்ப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் மதனியா கலீல் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள், பெற்றார்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவ்வரங்கிற்காக, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா ஐந்து இலட்சத்தை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment