Tuesday, June 4

பாதணிகள் மற்றும் பயணப் பொதிகளில் தங்க ஆபரணங்கள்; பெண்கள் மூவர் சுங்கப் பிரிவினரால் கைது


சட்டவிரோதமாக ஒருதொகை தங்க ஆபரணங்களை சென்னைக்கு கொண்டு செல்ல முயற்சித்த மூன்று பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த நகைகளின் பெறுமதி 52 இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் என சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டார்.
பூர்த்தி செய்யப்படாத தங்க ஆபரணங்கள் குறித்த பெண்களினால் மிகவும் சூட்சுமமான முறையில் அவர்களின் பாதணிகள் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோது கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவு குறிப்பிட்டது.
இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் கொழும்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என சுங்கப் பிரிவு சுட்டிக்காட்டியது.

No comments:

Post a Comment