Wednesday, June 5

இன ரீதியான பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முற்றுப்புள்ளி - கல்வியமைச்சர்

தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எந்த அரசாங்கப் பாடசாலையிலும் தற்போது இன, ரீதியான செயற்பாடுகள் இடம்பெறவில்லை என உறுதியாகத் தெரிவித்த அவர், இனி இன ரீதியாக பாடசாலைகள் உருவாக் கப்படுவது நிறுத்தப்படுவது டன் சகல பாடசாலைகளி லும் சகலரும் கற்கக்கூடிய நிலை பலப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment