Tuesday, May 7

ஜனாதிபதி மகிந்தவின் மகன் ரக்பி போட்டி நடுவர் மீது தாக்குதல்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளையமகன் ரோஹித்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ரக்பி போட்டி ஒன்றின்போது போட்டி நடுவரை தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு ஹெவலொக் மைதானத்தில் இலங்கை ரக்பி கால்பந்தாட்ட ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த 7 அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று இடம்பெற்றது.

போட்டியில் பொலிஸ் அணி, கடற்படை அணியை தோற்கடித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இளைய மகன் ரோஹித்த கடற்படையை சேர்ந்தவர் அல்ல என்ற போதும் அவரே நேற்றைய போட்டியின் போது கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கினார்.


வழமையாக அவரது சகோதரரான யோசித்த ராஜபக்சவே கடற்படை ரக்பி அணிக்கு தலைமை தாங்கி வருகிறார்.

இந்தவேளையில் நேற்று தலைமை தாங்கிய ரோஹித்த, போட்டி நடுவராக செயற்பட்ட திமிரி குணசேகரவின் சட்டைக்கொலரை பிடித்து பார்வையாளர்கள் முன்னால் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்பின்னர் குறித்த போட்டி சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதாக ஆங்கில செய்தி பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment