Monday, May 20

வேற்று மதங்களுடன் மோதவேண்டாம்: பிக்குகளுக்கு புத்தசாசன அமைச்சர் அறிவுறுத்தல்


tmநாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் மிகவும் பொறுமையுடன் செயற்பட வேண்டுமென பிரதமரும் புத்தசாசன, மத விவகார அமைச்சருமான டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
களனியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது;
சில பிக்குகள் வேற்று மதங்களுடன் மோதல்களை உருவாக்க முற்படுகின்றனர். இதனால் பெரும்பான்மை இனத்திற்கு அழிவு ஏற்படும் அபாயமுள்ளது. இதனை பௌத்த மாநாயக்கத் தேரர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பிக்குகள் பொறுமையுடனும், புத்திசாலித்தனமாகவும் செயற்பட வேண்டும்.
மக்களின் மனங்களை வெல்லக்ககூடிய மதத் தலைவர்கள் இல்லையென்றால், எவ்வளவுதான் விகாரைகள் அமைத்தும் பயனில்லை என்று மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment