Thursday, May 2

ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணும்வரை ஓயப்போவதில்லை - பொதுபல சேனா அறிவிப்பு



ஹலால் பிரச்சினை இன்னும் முடிவடையவில்லை. அதற்கு தீர்வு கிடைக்கும்வரை பொதுபல சேனா ஓயப் போவதில்லையென அந்த அமைப்பின் நிறைவேற்று அதிகாரியான டிலந்த விதானகே தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஹலால் தொடர்பில் நாம் முன்னெடுத்த செயற்றிட்டங்களை சில காரணங்களுக்காக தற்காலிகமாக நிதானமாக செயற்படுகிறோம். ஹலாலுக்கு எதிரான எமது பிரச்சாரத்தை பயன்படுத்தி சிலர் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தமுயன்றனர். முஸ்லிம் வியாபார நிறுவனங்களை தாக்கி சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டனர். ஆகவே எமது ஹலாலுக்கு எதிரான பிரச்சாரங்களை சற்று பிற்போட வேண்டியேற்பட்டது.
அதற்காக ஹலால் பிரச்சினை முடிந்துவிட்டது என்பது அர்த்தமல்ல. ஹலால் விடயத்தில் பொதுபல சேனா தொடர்ந்தும் தீவிரமாக செயற்படும். எமது இலக்கு அடையப்படும்வரை நாம் ஓயப்போவது இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. போச்சிடா .............
    மீண்டும் குனூத் ஓதச் சொல்வார்களோ.......?

    ReplyDelete