Friday, May 10

செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக வாழ இலங்கையர் ஒருவரும் விண்ணப்பித்துள்ளார்!


இனி இவ் உலகில் வாழ்ந்தது போதும் இனி மேல் மேலுலகில் வாழலாம் என்ற எண்ணத்தில் இலாப நோக்கமற்ற டச்சு நிறுவனமொன்று செவ்வாய்க்கு மனிதர்களை இலவசமாக அனுப்பி அங்கு நிரந்தரமாக குடியேற்றும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை கடந்த 2 வாரங்களாக ஏற்க ஆரம்பித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்க ஆரம்பித்தது முதல் இன்று வரையில் 78 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இதில் விசேட அம்சம் என்னவென்றால் இலங்கையர் ஒருவரும் விண்ணப்பித்துள்ளார்.


26 வயதான டிலிப என்பரே இலங்கையிலிருந்து விண்ணப்பித்துள்ளார்.


இலவசமாக ஒரு வழி டிக்கெட்டினை செவ்வாய் கிரகத்திற்கு வழங்குவதற்காக தெரிவு செய்யப்படும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க மட்டும் கட்டணம் அறவிடப்படுகின்றது.


செவ்வாய்க்கு சென்று மீண்டும் புவிக்கு திரும்ப முடியாது எனத் தெரிந்தும் Mars One எனும் இத்திட்டத்திற்கு உலகளவில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.


அதிலும் குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 20-40 வயதிற்குட்பட்டவர்களே அதிகளவில் இத்திட்டத்தில் இணைய ஆர்வம் காட்டுக்கின்றனர்.


விண்ணப்ப முடிவுத் திகதி குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை

No comments:

Post a Comment