Tuesday, May 21

வடமாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை- டக்ளஸ் தேவானந்தா

epdpவடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.  இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் உள்ள தெற்கில் உள்ளவர்கள் சிலர் கடுமையான கருத்துக்கள் வெளியிட்டு வருவதால் காணி காவல்துறை அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்காது நிறுத்தி வைப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வீணை சின்னத்தில் போட்டியிட்டால் கூடுதல் வாக்குகளை பெற முடியும் என்ற கருத்து பரவலாக உள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது என்றும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment