Friday, May 10

இம்மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் ஜெய்லானியில் (ஹூரகலயில்) உள்ள கட்டடங்கள் நீக்கப்பட வேண்டும்?

kuragala-mosque 






மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர், பலாங்கொட ஹூரகல பிரதேசத்தில் உள்ள கட்டடங்களை அகற்றாது போனால், 05 ஆயிரம் பேருடன் வந்து ஹூரகலவை முற்றுகையிடப் போவதாக சில இனவாத அமைப்பினர் தெரிவித்துள்ளதுடன், ஹுரகலவில் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளையும் மிரட்டியுள்ளனர்.

பௌத்த அமைப்பின் சின்னத்தை கொண்ட வேன் ஒன்றில் சென்ற இந்த குழுவினரில் கண்டி மற்றும் கொழும்பு விகாரைகளின் பிக்குமாரும் இருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குருகல பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல் உள்ளிட்ட ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment