Thursday, May 9

ஆபாசமாக சென்றதாக 16 வயது மாலைதீவு இளம்பெண் கைது



 

நாகரீக ஆடை அணிந்து சென்ற 16 வயது இளம் பெண் ஒருவர், மிக மிக ஆபாசமாக நடமாடியதாக மாலைதீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த ஞாயிறு ((5.5.2013) மாலைதீவின் தலைநகரில் 16 வயதான இளம்பெண் ஒருவர் கறுப்பு நிற நாகரீக கொக்டெய்ல் ஆடை அனிந்து அங்குள்ள புத்தகக்கடை ஒன்றினுள் நின்றிருந்தார்.
கலாச்சாரம் பேணுவதில் கடும் தன்மையுடன் நடந்து கொள்ளும் மாலைதீவு பொலீசார் குறித்த பெண் ஆபாச ஆடை அணிந்துள்ளதாக கருதி அவளை உடனடியாக கைது செய்தனர்.
அவள் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணம் பொலீஸ் மேலங்கி ஒன்றால் போர்த்தி அவள் பொலீஸ் ஜீப் இல் ஏற்றிச்செல்லப்பட்டாள்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலீஸ் உயர் அதிகார் ஒருவர், குறித்த பெண் மிக மிக மிக ஆபாசமாக ஆடை அணிந்துள்ளாள். இது நம் நாட்டின் கலாச்சாரத்துக்கு மிக்க கேடு. இது போன்ற சம்பவங்களை ஒருபோதும் தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment