Tuesday, April 30

மின் கட்டண உயர்வை கண்டித்து தேசிய எதிர்ப்பு பேரணி

மின் கட்டண உயர்வை கண்டித்து தேசிய எதிர்ப்பு பேரணி


April 30, 2013  08:52 am
மின் கட்டண உயர்வை கண்டித்து மே மாதம் 9ம் திகதி தேசிய எதிர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தப் போவதாக மின் கட்டண உயர்வுக்கு எதிரான பொது மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுவரையில் தொழிற்சங்கங்கள், அமைப்புக்கள் என 150 நிறுவனங்கள் எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக அமைப்பின் ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

இது குறித்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று (29) மாலை கந்தான பகுதியிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

No comments:

Post a Comment