Wednesday, April 17

'அறபு மத்ரஸாக்களின் மீது சிலர் கண் வைத்துள்ளனர்'


முழு நாட்டிலும் குறிப்பிடப்பட்ட அமைப்பினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் முடக்கப்படடு வரும் இவ்வேலையில் மேலும் சில புதிய பிரச்சினைகளை உருவாக்க சிலர் முனைவதாகத் தெரிகிறது என அகில இலங்கை அறபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம் ஜஃபர் றஹ்மானி
தெரிவித்துள்ளார்.
அவர் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
அண்மைக் காலமாக அறபு மத்ரஸாக்களின் மீது சிலர் கண் வைத்துள்ளனர். இவைகளில் பயங்கரவாதம் கற்பிக்கப்படுவதாகவும், மாணவர்களை இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு தூண்டுவதாகவும் பலர் பேச்சுக்கள், புத்தகங்கள் மூலமும் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும் சில அமைப்புக்கள் தாம் பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு அறபுக் கல்லூரிகளின் தகவல்களைச் சேகரிப்பதற்காக மத்ரஸாக்கள் தோறும் சென்று வருகின்றனர். அத்துடன் கல்லூரிக்கு எங்கிருற்து பணம் வருகிறது ? வெளிநாட்டு உதவிகள் இருக்கின்றனவா ? என பல முக்கிய கேள்ளிகளையும் கேட்கின்றனர். 
ஆனால் இவர்கள் எமது நாட்டு உளவுத்துறை அதிகாரிகளாகத் தெரியவில்லை என பல அறபுக் கல்லூரிகளிலிருந்து தமக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்துள்ளன எனவும் தெரிவித்துள்ளார். ஆகவே எந்த அறபுக் கல்லூரிகளுக்கு எவர் வந்தாலும் வருபவரின் உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் எந்தவொரு தகவல்களையும் எவரும் வழங்கக் கூடாது.
எனவும், எந்தவொரு தகவல் பெறவும் கல்லூரி முகவரியிடப்பட்டு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்திலே ஆலோசனைகள் செய்யப்பட்டு எக்காரியத்தையும் மேற்கொள்ள வேண்டும் என நாடு முவதிலுமுள்ள அறபுக் கல்லூரிகளை தாம் வேண்டிக்கொள்வதாகவும் தமதறிக்கையில் அவர் தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment