Sunday, April 28

மும்மொழி பெயர் பலகையை காட்சிப்படுத்தாத பஸ்களை சுற்றிவளைக்க நடவடிக்கை


தேசிய கருமமொழி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு அமைய பஸ் பெயர் பலகைகளை தயாரிப்பதற்காக வழங்கப்பட்ட கால எல்லை நிறைவடைந்துள்ளது.
பெயர் பலகைகளை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தாத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய கருமமொழி ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதற்காக பொலிஸாரின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அரச கருமமொழி ஆணைக்குழுவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுகின்ற பஸ்கள் மே மாதம் 7ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் திகதிகளில் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment