Saturday, March 30

இனவாதத்தை தூண்டும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்படும் - வாசுதேவ நாணயக்கார


vasudeva0இனவாதத்தை தூண்டும் சகல முயற்சிகளும் முறியடிக்கப்படும். சில கடும்போக்குடைய சக்திகள் நாட்டில் இன மற்றும் மத முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

புத்திஜீவிகள், மதத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாத கடும்போக்குடைய சக்திகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்படும். புத்திஜீவிகள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் மற்றும் மதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இன மத முரண்பாடுகளை தவிர்ப்பது தொடர்பில் விரைவில் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment