Friday, March 29

பெப்பிலியான வர்த்தக நிலையம் தாக்கப்பட்டமைக்கு காரணம் காதலாம்! - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

பெப்பிலியான வர்த்தக நிலையம் தாக்கப்பட்டமைக்கு காரணம் காதலாம்!












தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே பெப்பிலியான நகர வர்த்தக நிலையம் தாக்கப்பட்டுள்ளனெத பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பந்துல சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

இளைஞர் மற்றும் சிறுமிக்கு இடையில் காணப்பட்ட காதல் உறவே தாக்குதலுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெப்பிலியான வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நேற்று (28) இரவு நுழைந்த குழுவினர் அங்கு தாக்குதல் மேற்கொண்டனர்.

இதனால் வர்த்தக நிலையத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு ஒருவர் காயமடைந்தார்.

இந்த மோதல் குறித்து விசேட பொலிஸ் குழு விசாரணை நடாத்தி வருகிறது.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து இதுவரையில் சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment