Thursday, March 28

நாம் அஸாத் சாலியை கைதுசெய்ய முயற்ச்சிக்கவில்லை : குற்றப்புலனாய்வுப் பிரிவு

(
முன்னாள் கொழும்பு மேயர் அஸாத் சாலியை தாம் தேடவில்லை என குற்ற புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவானிடம் இன்று தெரிவித்தனர்.

தேசிய ஐக்கிய முன்னணயின் பொது செயலாளர் அஸாத் சாலி தாக்கல் செய்திருந்த முன் பிணை பற்றிய விசாரணையின்போதே கொழும்ப குற்ற புலனாய்வு பொறுப்பதிகாரி ஹெமிந்த திக்கோவித இவ்வாறு கூறினார்.

தெவட்டஹக ஜும்மா பள்ளிவாசல் வளவலில் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மௌலவி ஹஸன் மௌலானா செய்த முறைப்பாடு தொடர்பில் தாம் விசாரணை நடத்துவதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக அசாத் சாலியை கைது செய்யும் நோக்கம் தமக்கு இல்லையெனவும் இருப்பினும் கொழும்பு குற்ற புலானாய்வு பிரிவு அசாத் சாலியிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸார் இக்கைது நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை எனும் உறுதி மொழியை வழங்கினால் இந்த முன்பிணை மனுவை வாபஸ் பெறுவதாக அஸாத் சாலியின் வழக்குரைஞர் இதன்போது கூறினார்.

இருப்பினும் அஸாத் சாலி கைது செய்யப்படுமிடத்து அவரை இரண்டு சரீரப் பிணைகளுடன் ஒரு மில்லியன் ரூபா பிணையில் விடும்படி நீதவான் பணித்தார்.


No comments:

Post a Comment