Friday, March 29

கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் குறித்துதேசிய கிறிஸ்தவ புலமை அமைப்பு அதிருப்தி

கிறிஸ்தவர்களுக்கு எதிராக திடீரென்று மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து தேசிய கிறிஸ்தவ புலமை அமைப்பு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.


அண்மைக்காலமாக இலங்கையில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது பௌத்த அடிப்படைவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறாக 2013 ம் ஆண்டில் மாத்திரம் 23 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிழையான பொய்யான தகவல்களை ஊடகங்கள் பிரசாரம் செய்வதாக கிறிஸதவ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் தாம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ள போதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று தேசிய கிறிஸ்தவ புலமை அமைப்பின் செயலாளர் வணக்கத்துக்குரிய ரொஹான் ஏக்காநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment