Thursday, January 31

இரத்தினபுரியில் இனவாத ஆர்ப்பாட்டம் : பிக்குகள் ஏற்பாடு ?


இனவாத பெளத்த பிக்குகள் எதிர்வரும் செவ்வாய் அன்று இரத்னபுரி நகரில் ஆர்பாட்டம் ஒன்றை நடார்தப்போவதாக பிராந்தியத்தில் தகவல்கள் பரிமாறக்கொள்ளப்படுகின்றன. இதைஒற்றி இரத்னபுரி நகரில் பதாதை ஒன்றும் தொங்கவிடப் பட்டிருப்பதாகவும் உறுதிசெய்யப் படாத தகவல்கள் கிடைத்திருப்பதோடு நாம் தொடர்பு கொண்ட பலரும் இது குறித்த விடயங்கள் ஊரில் கதைக்கப்பட்டு வருவதாகவும் இது வதந்தியா இல்லையா என்பது தெரியாது என்றும் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் வியாபார நிலைகளுக்கும் எதிராகத் தொடரும் பேரினவாத முன்னெடுப்புகள் அநுராதபுர, தம்புள்ளை, குருணாகலை பகுதிகளைத் தொடர்ந்து இரத்தினபுரியைக் குறி வைப்பதில் ஆச்சரியமில்லை என்பதால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் பிராந்திய அரசியல் வாதிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதன் மூலம் அசம்பாவிதங்களையும் பதற்றத்தையும் தணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment