Thursday, July 5

பௌத்த சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி: பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர்

Untitled-1

பௌத்த மக்கள் சனத்தொகையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
எனது சிறு பிராயத்தில் இலங்கையில் மொத்த சனத்தொகையில் 79 வீதம் பௌத்தர்கள், தற்போது அந்த எண்ணிக்கை 61 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அடுத்த சனத்தொகை மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை 51 வீதமாக வீழ்ச்சியடையும்.
மதமாற்ற நடவடிக்கைகள் மிகவும் நுட்மான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. பல திட்டமிட்டக் குழுக்கள் மதமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என இந்துராகாரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கும் வைபத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment