Thursday, May 10

பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ரணில் தலைமையில் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்!


பாண், சமையல் எரிவாயு, பால் மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
இதில் ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாநகர மேயர் முஸம்மில் உள்ளிட்ட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment