Saturday, January 21

புலிகளிடம் யாழ். தளபதி இலஞ்சம் பெற்றார் என்று பரபரப்பு!


யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து யாழ். மாவட்டத்தின் தற்போதைய இராணுவ தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க மாதாந்தம் இலஞ்சம் பெற்று வந்து இருக்கின்றார் என்று இலங்கை இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவரான முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இவர் வழக்கு நடவடிக்கை ஒன்றுக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக்கப்பட்டார்.

இவர் இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசியபோது புலிகளின் கொழும்புத் தலைவரிடம் யாழ்ப்பாணத்தின் தற்போதைய தளபதி யுத்த காலத்தில் மாதாந்தம் ரூபாய் 30,000 பெற்று வந்திருக்கின்றார் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment