Friday, December 30

நாம் இஹ்வான்களுக்கே வாக்களித்தோம், அவர்களே மிகுந்த புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையுமுடையவர்கள் - பாதிரியார் மகார் பௌசி


Father Maher Fowziஎகிப்தின் அலக்ஸாந்திரியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இஹ்வான்களின் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேற்பாளர்களுக்கே வாக்களித்தனர். அவர்களை நாங்கள் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் மிக்கவர்களாகவே காண்கின்றோம் என அலக்ஸாந்திரியா கிறிஸ்தவ ஆலயத்தின் ஆயர் பாதிரியார் மகார் பௌசி தெரிவித்துள்ளார்.

ஒரு சில விடயங்களில் நாம் அவர்களுடன் உடன்படாத போதும் நிறைய விடயங்களில் நாங்கள் அவர்களுடன் உடன்படுகின்றோம். பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் இயலுமை அவர்களுக்கே உள்ளது என்பதால் நாம் அவர்களுக்கே வாக்களித்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள் என்றவகையில் இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு சாதாரணமானது எனத் தெரிவித்திருக்கும் அவர் கிறிஸ்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக இருத்தல் அல்லது அவர்களுடன் வாழ்தல் என்பது புதிய ஒரு விடயமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிர இஸ்லாமிய கருத்துப் போக்குக் கொண்டவர்களை மிதவாத இஸ்லாமியவாதிகளால் சமாளிக்கமுடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளுக்காக மக்கள் சபையில் கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் முஸ்லிம்களே பலமாக ஆதரித்துப் பேசக்கூடியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment