Tuesday, December 20

மலவாயிலில் மறைக்கப்பட்டிருந்த ரூ. 50 இலட்சம் பணத்துடன் சந்தேகநபர் கைது



50 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை மலவாயிலில் வைத்து சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முற்பட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேக நபரிடமிருந்து 33ஆயிரம் யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment