Friday, July 22

சவூதி அரேபியாவில் 17 ஆயிரம் கடவுச் சீட்டுகள் தீயில் எரிந்தன




வியாழக்கிழமை, 21 ஜூலை 2011 18:41
செங்கடல் நகரமான ஜித்தாவில் புகழ்பெற்ற வணிகக் குழுமங்களுள் அல் ஈசாயி குழுமமும் ஒன்று. மதீனா நெடுஞ்சாலையிலுள்ள இதன் ஆறு மாடி தலைமையகக் கட்டிடத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட  தீ விபத்தில் பல கோடி மதிப்பிலான கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இதன் மொத்த மதிப்பு ஐந்து பில்லியன் ரியால்களுக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

சவூதி அரேபியாவெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான கட்டடப் பணிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் தீக்கிரையாகியுள்ளன. குறிப்பாக, இந்தக் குழுமத்தின் தலைமையக மனித வளப் பிரிவகம் செயற்பட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ 17 ,000 கடவுச் சீட்டுகள்  முழுவதும் எரிந்து போய் பல்லாயிரக்கணக்கான அயலக ஊழியர்களின் விடுமுறைக் கனவைப் பொசுக்கி விட்டுள்ளன.

இத்தகவலை ஜித்தாவிலிருந்து வெளியாகும் அரபு நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

முறையான பரிகாரங்களை மேற்கொள்ள தமது நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டுப் பணியாளர்கள் அனைவரும் தத்தமது தூதரகங்களை அணுகி புதிய கடவுச் சீட்டுக்களை பெற்றுக் கொள்ளுமாறு   அந் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment