Thursday, June 30

சந்திகள் தோறும் புத்தர்சிலைகள் அமைக்க அஸ்கிரிய பீடாதிபதி எதிர்ப்பு


[ புதன்கிழமை, 29 யூன் 2011, 06:17.25 PM GMT ]
இலங்கையின் சந்திகள் தோறும் புத்தர் சிலைகளுடன் கூடிய வழிபாட்டு மையங்களை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.


சந்திகள் தோறும் புத்தர் சிலைகளுடன் கூடிய வழிபாட்டு மையங்களை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று அவர்  பிரதமர் டீ.எம். ஜயரத்தினவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு சந்திகளில் வழிபாட்டு மையங்களை அமைத்து புத்தர் சிலைகளை வைப்பது புத்த மதத்தின் கோட்பாடுகளை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தர்சிலைகள் அதற்குப் பொருத்தமான இடங்களில் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடாதிபதி தன்னைச் சந்திக்க வந்திருந்த பிரதமர் டீ.எம். ஜயரத்தினவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார்

No comments:

Post a Comment