Saturday, May 21

தலைமைத்துவ பயிற்சி திகதியில் மாற்றம் இல்லை




பல்கலைக்கழகத்துக்கு நுழையவுள்ள மாணவர்களுக்காக நடைபெறவுள்ள தலைமைத்துவ பயிற்சி திட்டமிட்டபடி எதுவித தாமதமுமின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சர் எஸ். பி .திசாநாயக தெரிவித்துள்ளார். முன்னதாக அறிவிக்கபட்டதற்கிணங்க எதிர்வரும் 23 ஆம் திகதி பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

முதன்முறையாக பலகலைக்கழக மாணவர்களுக்காக இராணுவ முகாம்களில் நடைபெறவுள்ள பயிற்சிகள் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணமுள்ளன. இந்த பயிற்சிகளுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் 7 நாட்களுக்கு இந்த பயிற்சியை பிற்போடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு சட்டமா அதிபருக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment