Wednesday, July 20

பொது நிர்வாக சேவை ஆள்சேர்ப்பு முறைமையை மாற்றியமைக்க வேண்டும்

பொது நிர்வாக சேவையில் சேர்த்துக் கொள்வதற்கான முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதேவேளை தமிழ்மொழியை பேசக் கூடியவர்களை தேவையான வகையில் பொது நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான யோசனையொன்றை அரசாங்கத்திடம் முன்வைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, July 19

உலகின் மிகப்பெரிய ஒட்டுண்ணி இலங்கையரின் உடலில் கண்டுபிடிப்பு

இலங்கையில் டெங்கு மற்றும் மர்மமான வைரஸ் நோய்கள்  பரவி வரும் நிலையில், மருத்துவ ஆராய்ச்சி நிலையம் மனிதனின் உடம்பில் வாழும் மிகப்பெரிய ஒட்டுண்ணியொன்றை ஓர் இலங்கையரில் அடையாளம் கண்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் மாறுவேடம் போட்டார்களா..?


 
 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர்  காயல்பட்டினம் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் மற்றும் ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டுக்கு இரகசியமாகச் சென்று வந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு:ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது-திக் விஜய்சிங் பரபரப்பு பேட்டி



மும்பை தொடர் குண்டுவெடிப்பில் ஹிந்து தீவிரவாத இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை நிராகரித்து விடமுடியாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த ஏராளமான தீவிரவாத செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினைக் குறித்த ஆதாரங்கள் தன் வசம் உள்ளதாக திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார்.

திறமைமிக்க நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு ஆகக்குறைந்த இடம்



உலகளாவிய புதிய தரவுகளின்படி இலங்கை ஆகக்குறைந்த திறமைகளை கொண்ட நாடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தரவுக்காக எடுக்கப்பட்ட 60 நாடுகளில் இலங்கைக்கு 59 வது இடமே கிடைக்கப்பெற்றுள்ளது.

இப்படியும் ஓர் அமைச்சர்!

கடந்த வாரம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் பிரான்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இக் குழுவில் தேசிய மொழிகள் மற்றும் மரபுரிமைகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் அடங்கியிருந்தார்.


வழமையாகவே வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் அமைச்சர்களுக்கு செலவுகளுக்காக அரசாங்கத்தினால் ஒரு தொகைப் பணம் வழங்குவது வழக்கமாகும். அதற்கமைய பிரான்சுக்குச் சென்ற அமைச்சர்களுக்கும் தலா 3600 அமெரிக்க டொலர் வீதம் பணம் வழங்கப்பட்டிருக்கிறது.

உள்வீட்டு துரோகியின் அறிக்கை:வெளிநாட்டு நிதியுதவியைப் பெறும் முஸ்லிம் அமைப்புகள் தீவிரவாதத்தைப் பரப்புகின்றன –ரியாஸ் சாலி



வெளிநாட்டு நன்கொடையாளரிகளிடமிருந்து நிதியதவியைப் பெறும் இலங்கையிலுள்ள முஸ்லிம் நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கொழும்பு தெவடகஹ பள்ளிவாசல் நிர்வாகிகளுள் ஒருவரும் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலியின் சகோதரருமான ரியாஸ் சாலி தெரிவித்துள்ளதாக இன்று வெளியான ‘LAKBIMA NEWS’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புனித ரமாழான்மாதத்தில் நடமாடும் பள்ளிவாசல்களை அமைப்பதற்கு துருக்கி நடவடிக்கை.








எதிர்வரும் புனித ரமழான்மாதத்தை சிறந்த ஆத்மீகமாதமாக மாற்றும் நோக்கில்,துருக்கியில் நடமாடும் பள்ளிவாசல்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாநாயகக் துருக்கிக் குடியரசின்,ஜனாதிபதியின் மதவிவகாரப்பிரிவு இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.துருக்கி நாட்டுமக்கள் எதிர்வரும்சங்கையான புனித ரமழான் மாதத்தை எப்படிப் பயன்படுத்துகின்றனர். என்பதைப் பற்றிய அறிக்கைகளை பெற்றுக் கொள்வதற்காக,நாடளாவிய ரீதியில் இயங்கும் முப்தி அலுவலகங்களுக்கு விவர அறிக்கைகளைதுருக்கியின் ஜனாதிபதி மதவிவகாரப்பிரிவு விநியோகித்துள்ளது. தொழிலாளர்களதும் ,உல்லாசப் பிரயாணிகளுதும் நன்மைகருதி,புனித ரமழான் மாதத்தில் நாடு பூராகவும் உள்ள நகரங்களில் நடமாடும் பள்ளிவாசல்கள் அமைக்கபடுமென,இவ் விவரஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓன்லைனிலேயே உங்கள் கண்களை பரிசோதிப்பதற்கு...


 
 
எல்லாவற்றிற்கும் இணையதளங்கள் என்ற காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அபரிமிதமாக வளர்ச்சி அடைவதால் தான் இணைய தளங்கள் அதிக அளவில் உருவாகின்றன.

இன்று சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரும் பொதுவான பிரச்சினை கண்களின் பார்வை குறைபாடு. முக்கியமாக கணணி உபயோகிப்பவர்களுக்கு இந்த பிரச்சினை உள்ளது. 

தூத்துக்குடி - இலங்கை செல்லும் கப்பலில் நோன்பாளிகளுக்காக சிறப்பு ஏற்பாடு!


இலங்கையில் செயல்பட்டுவரும்  காயல்பட்டினம் இலங்கை நல மன்றத்தின் (காவாலங்கா) துணை செயலாளர் ஜனாப்.ரஃபீக் ஹாஜி, எஸ்.ஏ.ஜவாஹிர் (காவாலங்கா நிர்வாகக் குழு உறுப்பினர்), ஏ.எஸ்.அஷ்ரஃப் (காவாலங்கா நிர்வாகக் குழு உறுப்பினர்), எம்.ஏ.புஹாரி (காவாலங்கா உறுப்பினர்) ஆகியோர் நேற்று முன்தினம் (15/07) தூத்துக்குடி - இலங்கை செல்லும் கப்பல் நிர்வாகத்தின் செயல்பாட்டு மேலாண்மை நிர்வாகி திரு.கோபால் அவர்களை சந்தித்து சில விளக்கங்களை கேட்டறிந்தனர்.


அதன் போது ஹாலால் முறையிலேயே உணவு
தயாரிக்கப்படுவதாகவும் அதனைப்பற்றிய அறிவிப்பு பலகை கப்பலின் உணவு விடுதியில் வைப்பதற்கான நடவடிக்கை விரைவில் எடுப்பதாகவும் கூறினார்கள்.

மேலும் கப்பலில் பயணம் செய்யும் முஸ்லிம்களின் எண்னிக்கையை முன்னதாகவே அறியத்தந்தால் அவர்களுக்கு ஸஹர் 3 மணிக்கு உணவு ஏற்பாடு செய்துதர நடவடிக்கை எடுக்கிறோம். அவர்கள் கப்பலில் உள்ள உணவகத்திற்கே வந்து சாப்பிட்டுக் கொள்ளலாம். நோன்பு நோப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கான உணவு தயார்செய்து ஒரு குறிப்பிட அறையில் வைப்பதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்று பதில் கூறிய திரு.கோபால் அவர்கள் விரைவில் பயணிகள் காத்திருக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்யவுள்ளோம் என்றும் தெரிவித்தார்கள்.

நன்றி காயல் டுடே!