Sunday, November 20

எஸ்எம்எஸ்.சில் அனுப்பும் 1500 ஆபாச வார்த்தைக்கு பாகிஸ்தானில் தடை


எஸ்எம்எஸ்.சில் அனுப்பும் ஆபாச வார்த்தைகளை தடை செய்ய செல்போன் நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் செல்போன் மூலம் எஸ்எம்எஸ் எனப்படும் குறுந்தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதன்மூலம் தீவிரவாதிகள் தகவல் களை ரகசியமாக பரிமாறி கொள்வதும், இளம் பெண்களுக்கு ஆபாச தகவல்கள் அனுப்புவதும் அதிகரித்து வந்தது. இதையடுத்து ஆபாச வார்த்தைகள், கிண்டல், கேலி, மத துவேசங்கள் இடம்பெறுவதை தடுக்க பாகிஸ்தான் தகவல் தொடர்புத் துறை முடிவெடுத்துள்ளது.

Saturday, November 19

அரசாங்க ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு


2012 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவுள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டடாரத்திலிருந்து தெரியவருகின்றது.

அரசாங்க ஊழியர்களுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு ஒரு தரப்பினரும் , 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குமாறு இன்னொரு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக் கழகங்கள் இனரீதியாக செயற்பட முடியாது! மாணவர்களிடையே விரிசல்கள் ஏற்படுவதைத் தடுக்க ஆங்கிலம கற்கை மொழியாக மாற்றப்படும்


SP_Dissanayakeசிங்கள தமிழ் முஸ்லிம் மாணவர்களிடையே விரிசல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக பல்கலைக் கழகங்களில் கற்கை மொழி ஆங்கிலமாக மாற்றப்படவுள்ளது என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.


கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இதனைக் கூறினார்.

சரத் பொன்சேக்காவை குற்றமற்றவராக கருதி விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்த நீதிபதி


வெள்ளைக் கொடி வழக்கு தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், குறித்த அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஆறு மாத கால சிறைத் தண்டனையை பொன்சேக்கா அனுபவிக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளது.எனினும் இந்தத் தீர்ப்பிற்கு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் ஒரு நீதிபதி இனங்கவில்லை.முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா மீதான வெள்ளைக்கொடி விவகார வழக்கின் விசாரணைகள் தீபாலி விஜேசுந்தர, ஏ.இசெட்.ரசீன் மற்றும் டப்ளியூ.எம்.ரி.பி.வராவெவ ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றன.இந்த வழக்கிற்கான தீர்ப்பு அறிவிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மேல் நீதிமன்ற வளாகத்தை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறு வாழைத்தோட்ட பொலிஸார் நேற்று நீதமன்றத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீஜயவர்தனபுர, பல்கலைக்கழக மண்டப கூரையிலிருந்து குண்டுகள் மீட்பு


ஸ்ரீஜயவர்தனபுர, பல்கலைக்கழக மண்டபம் ஒன்றின் மேல் கூரையிலிருந்து ஐந்து குண்டுகளைப் பொலிஸார் மீட்டுள்ளனர். குறிப்பிட்ட கூரையைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டோரே இவற்றினைக் கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு அறிவித்துள்ளனர்.அங்கு விரைந்த பொலிஸார் ஐந்து குண்டுகளைக் கைப்பற்றினர். இந்தக் குண்டுகள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இதேவேளை,கூரையில் இந்தக் குண்டுகளை வைத்தோரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.(இக்னேஷியஸ்)

வேலியே பயிரை மேய்ந்த கதை - பத்து வயதான சின்னத் தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயது பெரிய தேரர்

பத்து வயதான சின்னத் தேரரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 43 வயது பெரிய தேரரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் புத்தக சிறிராகல உத்தரவிட்டுள்ளார்.10 வயதான தேரரை விஹாரைக்குள் மறைவிடம் ஒன்றுக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என இவர்மீது குருநாகல் பொலிஸார் குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தப் பாலியல் துஷ்பிரயோகத்தின் போது சின்னத் தேரருக்குச் சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன. தற்போது இவர் குருநாகல் சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.(இக்னேஷியஸ்)

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு

புகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு       

புகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளிக்கும்.
தேவையான மாடலை தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவையானால் செய்துகொண்டு அதனை தனியே சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும் உங்களின் வலதுபுறம் அந்த புகைப்படத்தை அட்ஜஸ்ட் செய்வதற்கான டூல்கள் -பிரஷ்கள் இருக்கும். அதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி தேவையான அளவினை வைத்துக் கொள்ளலாம்.

வியாழன் கிரகத்தில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் தகவல்!

வியாழன் கிரகத்தில் தண்ணீர் நாசா விஞ்ஞானிகள் தகவல்!     

வியாழன் கிரகத்தில் தண்ணீர் உள்ளது என நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகம் வியாழன். வியாழன் கிரகம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கடந்த 1989ம் ஆண்டில் கலிலியோ விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அந்த ஓடம் வியாழன் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்தது.அதில் அங்கு ஐஸ்கட்டி படிவங்கள் ஓரளவு இருப்பது தெரிய வந்தது. அது மிக தெளிவாக தெரியாததால் அங்கு தண்ணீர் இருப்பது சந்தேகம் என கருதினர்.


1990இற்குப் பின்னர் யாழ்ப்பாணம் போகவுள்ள யாழ்தேவி

[ Friday, 18 November 2011, 02:06.52 PM. ]
வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை சீரமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இந்தியாவும் சிறிலங்காவும் கையெழுத்திட்டுள்ளன.போரினால்ரினால் அழிக்கப்பட்ட வடபகுதிக்கான தொடருந்துப் பாதையை 150 மில்லியன் டொலர் செலவில் புனரமைப்புச் செய்வதற்கான புரிந்துணர்வுஉடன்பாட்டில், சிறிலங்கா தொடருந்து திணைக்களமும், இந்தியாவின் இர்கோர்ன் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளன.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கையெழுத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு உடன்பாட்டுக்கமைய பளை தொடக்கம் காங்கேசன்துறை வரையிலான தொடருந்துப் பாதை இந்தியாவின் உதவியுடன் புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.

துனிசியா தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது


November 18, 2011.... AL-IHZAN World News

துனிசியா இடைத்தேர்தலில் அந்நாட்டின் மிதமான நாஹ்தா கட்சி மொத்தமுள்ள 217 இடங்களில் 89 இடங்களை வென்று ஆட்சியை பிடித்துள்ளதாக துனிசிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


அடுத்த ஆண்டு புதிதாக தேர்தல் நடத்தபடுவதையடுத்து இப்போது வென்றுள்ள அரசு இடைக்காலத்தில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.