Thursday, October 20

இஸ்ஸாத்தை உன்மை படுத்தும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள் ! (அதிரவைக்கும் அத்தாட்சி)










கும்ரான் மலைக்குகை !



அல் குர ஆன் -  18:9. "(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?" 




  • சாவுக்கடல் சாசனச் சுருள்கள் :


இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்களது வரலாற்றுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

பாரதவின் கொலை விசாரணையில் அம்பலமான புதிய தகவல்கள்


[ வியாழக்கிழமை, 20 ஒக்ரோபர் 2011, 12:45.56 PM GMT ]
முல்லேரியாவில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது அங்கு காணப்பட்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்...
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வாவின் வாகன அணியில் நுகோகொடை பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன், முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாலக குணசேகர ஆகியோரும் இருந்தனர் என்ற தகவல் இன்று (20) கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திவின் கார்ச் சாரதியான போலகே சமன் என அழைக்கப்படும் லியனே சமந்த மற்றும் துமிந்த சில்வாவின் கார்ச் சாரதியான பாலசூரிய ஆராய்ச்சி சமிந்த ஆகியோர் வழங்கிய வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என இன்று மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

Breaking News கேணல் கடாபி கைது : லிபிய தொலைக்காட்சி



ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாக லிபிய தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.
கேணல் கடாபி 'பிடிக்கப்பட்டுள்ளதாகவும்' ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என்பது உறுதியில்லை எனவும் லிபியாவை தற்போது நிர்வாகம் செய்யும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகளின் களத் தளபதி ஒருவர் அல் ஜஸீராவுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிடிபட்டுள்ளதாகவும் அவரின் இரு கால்களும் காயமடைந்துள்ளதாகவும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

சார்ஜாவிலிருந்து சட்டவிரோத சிகரெட்களை கடத்திவந்த ஆசிரியர் சுங்க அதிகாரிகளால் கைது

சார்ஜாவிலிருந்து சட்டவிரோத சிகரெட்களை கடத்திவந்த ஆசிரியர் கைது



சட்டவிரோதமாக இலங்கைக்கு சிகரெட் வகைகளை கடத்திவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 04.30 அளவில் சார்ஜாவில் இருந்து வந்த நபரே சட்டவிரோத சிகரெட் தொகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 31,600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் இலங்கை பெறுமதி 6 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிகரெட் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது


October 20, 2011  12:06 pm
நேற்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி கோர்ட் லீப், பென்சன், மற்றும் பல்மால் ஆகிய சிகரெட் வகைகளின் விலை 2 ரூபாவாலும் துன்ஹில் சிகரெட் வகையின் விலை 3 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது.

Wednesday, October 19

"உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!


 



October 19, 2011
பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Monday, October 17

இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு



October 17, 2011

இஸ்ரேலிருந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு இயற்கை வாயுவை கொண்டு செல்லும் எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அரசு அனுமதி மறுத்துள்ளது.
துருக்கியில் தனியார் நிறுவனங்கள் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி சமர்ப்பித்த மனுவை துருக்கி எரிசக்தி துறை அமைச்சர் தானிர் இல்திஸ் தள்ளுபடிச் செய்ததாக அறிவித்தார்.
காஸ்ஸா நிவாரணக் குழுவினரின் கப்பல் மீது தாக்குதல் நடத்தி9 துருக்கியர்களை கொலைச் செய்யவில்லையெனில் இத்திட்டத்திற்கு தடை ஏற்பட்டிருக்காது என இல்திஸ் தெரிவித்துள்ளார்.


இஸ்ரேலின் அராஜக தடையினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற உதவிக் கப்பலை கடந்த 2010 மே மாதம் இஸ்ரேல் தாக்கி 9 துருக்கிய தன்னார்வத் தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கு மன்னிப்புக்கோர வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை இஸ்ரேல் அலட்சியப்படுத்தி வருவது இரு நாடுகளிடையேயான உறவை சீர்குலைத்துள்ளது.

முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்குத் தரமாட்டார்கள்:ஜனாதிபதி

கொழும்பு தேர்தல் முடிவு பற்றி நீங்கள என்ன கூறுகிறீர்கள் என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த ஜனாதிபதி நீங்கள் எதனை கூறுகிறீர்களோ அதனையே நானும் கூறுகிறேன். கொழும்பின் முடிவு இப்படி அமையும் என்பது எனக்கு முன்பே தெரியும். முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்கு தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Sunday, September 11

மர்ம மனிதர் நடமாட்டம்! இரு படையினரை மடக்கினர் மக்கள்! நேற்றிரவு அப்பகுதியில் பதற்றம்!


[ ஞாயிற்றுக்கிழமை, 11 செப்ரெம்பர் 2011, 06:01.57 AM GMT ]
யாழ். சுழிபுரம் பிரதேசத்தில் உள்ள தொல்புரம் மத்தி பகுதியில் மர்மமனிதர்களின் நடமாட்டத்தை அடுத்து இராணுவத்தினர் இருவர் பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு இரவு 10 மணியளவில் வந்த பொலிஸாரும், இராணுவத்தினரும் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலைக்கு சமீபமாக மர்ம மனிதர்கள் நால்வரின் நடமாட்டத்தை பொதுமக்கள் அவதானித்துள்ளனர். பின்னர் அவர்களை பிரதேச மக்கள் கலைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் ஓடித் தப்பிவிட்டனர்.

கிரேக்கத்தின் ஏதேன்ஸ்நகரில் முதலாவதுபள்ளிவாசலைஅமைக்க அந்நாட்டுப் பாராளுமன்றம் அஙகீகாரம்.!









கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸில் முதலாவது சட்டரீதியான பள்ளிவாசலை அமைப்பதற்கு அந்நாட்டுப்பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.35வருடங்களாக நடைபெற்ற வாதப்பிரதிவாதங்களுக்கு ப்பின்னரே,ஏதன்ஸில் சட்டரீதியான முதலாவது பள்ளிவாசலை அமைப்பதற்கான அரசாங்கத்தின்அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. கிரேக்கத்தலைநகர் ஏதேன்ஸில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். பல்லாயிரகக்கணக்கான முஸ்லிம்கள் சனத்தெகையைக்கொண்ட ஏதேன்ஸ்நகரில், அவர்களுக்கு ஓர்பள்ளிவாசலை அமைப்பதற்கான பிரேரணை கிரேக்கப் பாரளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.இப்பிரேரணைக்கு ஆதரவாக 198வாக்குகளும், எதிராக 19வாக்குகளும்அளிக்கப்பட்டிருந்தன. இவ்வாக்கெடுப்பில் பொதுவாக எல்லாக்கட்சிகளதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.ரைட்-விங் எனும் (இனவாத) அரசியல்கட்சியானதுஇவ்வாக்கெடுப்பில்கலந்துகொள்ளவில்லை.
'ஏதென்ஸின் மத்தியபகுதியில் பயங்கரவாதிகளைஉருவாக்கும் ஒரு நிலையத்தைஅமைக்க அரசு ஆதரவுவழங்குகின்றது.'என அவ்இனாவதக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.