இவ்வியடம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் உபதலைவரும் கிழக்குமாகாண விவசாய அமைச்சருமான ஹாபீஸ் நஸீர்
அகமட் அவர்களின் தலைமையில் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் 25.04.2013 பேச்சுவார்தை ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸில் இருந்து தேர்தல் மூலம் பாராளுமன்றம் சென்று பின்னர்
அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து பின்னர்
அதிலிருந்து அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸிக்கு மாறி தற்போது கிழக்கு
மாகாண சபை உறுப்பினராகவுள்ளார்.
இவருக்கு கிழக்குமாகாண முதலமைச்சர் பதவி
வேண்டும் என அசாங்கத்திடம் கோரியோது அதனை ஜனாதிபதி தருவதாக கூறியும் அது
நிறைவேறாதவிடத்து பாராளுமன்றில் பிரதியமைச்சர் பதவி ஒன்று தருவதாக ஜனாதிபதி
அவர்களினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டடிருந்தது.
இவருக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற
உறுப்பினர் வழங்கி அதன் மூலம் பிரதியமைச்சர் பதவி வழங்குவதாற்காக
பாராளுமன்ற உறுப்பினர் மாலினி பொன்சேகா அவர்களை பதவி விலக வைத்து
அவ்வெற்றிடத்திற்கு அமீரலியை இட்டு நிரப்புவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது
அவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் தான் பதவி விலகுவதாக அறிவித்தவுடன்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தது பின்னர்
அவர் தனது கடித்தினை மீளப் பெற்றுக்கொண்டார்.
அதன் பிற்பாடு அமீர் அலியின் மீண்டும்
பாராளுமன்றம் செல்லும் கனவுஇடை நடுவில் கலைந்தது. இவருக்கு பாராளுமன்ற
உறுப்பினர் நியமனம் வழங்கும் பொறுப்பு அமைச்சர் பஸீல் ராஜபக்ச அவர்களிடம்
ஒப்படைக்கப் பட்டிருந்தது இது நிறைவேறாத பட்சத்தில் தற்போது அமீரலி
மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸக்குத் தாவவுள்ளார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment