Wednesday, March 20

தயட கிருல ஹராம்: அசாத் சாலி



முஸ்லிம்களுக்கு தயட கிருள - தேசத்திற்கு மகுடம் கண்காட்சி ஹராமாகும் என முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.

இதனால் முஸ்லிம்கள் எவரும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கண்காட்சியில் கலந்துகொள்ளக் கூடாது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான விசேட தீர்மானமொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொண்டுள்ளதாகவும் அசாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment