Tuesday, March 26

வெளிநாட்டவர்களுடன் ரணில், சந்திரிகா, மங்கள சமரவீர இரகசிய பேச்சுவார்த்தை!

News Service








காலியில் உள்ள பிரபல விடுதியொன்றில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் வெளிநாட்டவர்களுடன் இணைந்து ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23 ஆம் திகதி குறித்த விடுதிக்கு சென்ற இவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்த பேச்சுவார்த்தையில் 25 வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment