Friday, March 8

உலமா சபையை கோத­பாய இன்று சந்­திக்­கி­றார்





அகில இல­ங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபை பிர­தி­நி­தி­க­­ளு­க்கும் பாது­காப்­புச் செய­லாளர் கோத­பாய ராஜ­பக்­ஷ­வுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு ஒன்று இன்று பிற்­பகல் பாது­காப்பு அமைச்சில் இடம்­பெ­ற­வுள்­ள­து.

பிற்­பகல் 2.30 மணிக்கு இடம்­பெ­ற­வுள்ள இச் சந்­திப்பில் ஹலால் விவ­காரம் தொடர்பில் ஏற்­பட்­டுள்ள இழு­பறி நிலைக்கு தீர்­வு காண்­பது தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­து.
இச் சந்­திப்பில்  பௌத்த பிக்­குகள் சிலரும் பங்­கேற்­க­­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­ற­து.

சில வாரங்­க­ளுக்கு முன்னர் இதே­போன்று உலமா சபையை சந்­தித்துப் பேச்சு நடத்­திய பாது­காப்புச் செய­லா­ளர், முஸ்­லி­ம்­க­ளுக்கு மாத்­திரம் ஹலால் உற்­பத்­தி­களை வழங்கும் வகையில் பொறி­மு­றை ஒன்றை வகுக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். அத­­னை­ய­டுத்து முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­திரம் ஹலால் உற்­பத்­தி­களை வழங்­கு­மாறும் முஸ்­லி­மல்­லா­தோ­ருக்­கான உற்பத்­தி­க­ளுக்கு ஹலால் சான்­றிதழ் அவ­சி­ய­மில்லை எனவும் உலமா சபை அறி­வித்­தி­ருந்­தது.

இதே­வே­ளை நேற்­றைய தினம் முஸ்லிம் அமைப்­­பு­களின் பிர­தி­­நி­தி­க­ளுக்கும் தேசிய புல­னாய்வுப் பிரிவு தலைமை அதி­காரிக்­கு­மி­­டை­யி­லான சந்­திப்பு ஒன்று பாது­காப்பு அமைச்சில் இடம்­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­க­து.

No comments:

Post a Comment