கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவியை தமது கட்சிக்கு வழங்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் சரியான இணக்கப்பாடு ஏற்படுத்த முடியாவிட்டால் தனித்து போட்டியிட நேரிடும். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.