
ஏப்ரல் மாதம் இருபதாம் திகதியிலிருந்து மின்சாரப் பட்டியல் மே மாதம் 20 ஆம் திகதிவரை கணிப்பிடப்படும் எனவும் மின்சாரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதனால், எதிர்வரும் திங்கட் கிழமை முதல் பாவனையாளர்களின் கைகளை வந்தடையும் சகல மின்சாரப் பட்டியல்களும் அதிகரிக்கப்பட்ட கட்டண அமைப்பிலேயே கணிக்கப்படும் என மின்சாரத் திணைக்களத்தின் சிரேட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மின்சாரத் திணைக்களம் வெளியிட்ட புதிய கணிப்பீட்டு முறைக்கேற்ப, 60 அலகுகளுக்கு மேற்பட்ட அனைத்து மின்சாரப் பட்டியல்களினதும் தொகையில் அதிகரிப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment