|
கொழும்பு 7 தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள பொதுபல சேனாவின் தலைமையகத்தில்
நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே
மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொதுபல சேனாவின் அமைப்பாளர்
டிலானந்த விதானகே கூறுகையில்,
முஸ்லிம் மக்களையோ பள்ளிவாசல்களையோ பொதுபல சேனா உடைக்கவோ தாக்கவோ இல்லை.
ஆனால் பல அடிப்படைவாத சக்திகள் பொதுபல சேனா மீது வீண்பழிகளை சுமத்தி
வருகின்றன. ஹலால் விடயத்திலும் அவ்வாறே குற்றம் சுமத்தப்படுகின்றது.
பௌத்தர்கள் ஹலாலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறும் போது அதனை
திரிபுபடுத்தி இலங்கையில் ஹலாலை தடைசெய்ய வேண்டும் என்ற பிரசாரத்தை
குறிப்பிட்டு சில குழுக்கள் பரப்புகின்றன. முஸ்லிம்கள் எமது சகோதரர்களே,
அவர்களை முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டியது நம்
அனைவரினதும் கடமையாகும். அரசாங்கத்திற்குள் உள்ள அடிப்படைவாதத்திற்கு துணை
செல்லும் முஸ்லிம் அமைச்சர்கள் வன்னியில் தமிழ் மக்களின் காணிகளை சூறையாடி
அவற்றை அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளனர். இவற்றை அரசு கவனத்தில்
கொள்ள வேண்டும்.
|
No comments:
Post a Comment