Sunday, March 17

கண்டி மாடறுக்கும் மடுவத்தை மூடியமைக்கு மேயருக்கு பாராட்டு

கண்டி மாநகர சபையின் மாடறுக்கும் மடுவத்தை மூடியமை தொடர்பில் கண்டி நகரெங்கும் சுவரொட்டிகளை ஒட்டியும் பதாதைகளை காட்சிப் படுத்தியும் கண்டி மேயருக்குப் பாராட்டுத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி சுதுஹூம்பொல மாட்டறுப்பு மடுவத்தை மூடியமைக்காக கண்டி மாநகரின் 18 வது நகரபிதா மகேந்திரரத்வத்தைக்கு எமதுபாராட்டுக்கள் - கண்டிவாழ் மக்கள்'என குறித்த வாழ்த்து சுவரொட்டிகளிலும் பதாதைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும்  கண்டி மத்திய சந்தையில் அனுமதி பெற்ற சகல மாட்டிறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டு  வழமை போல் வியாபாரம் நடை பெற்று வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

.

No comments:

Post a Comment