இலங்கையின் இன, மத பாசிஸ இயக்கமாக உருவெடுத்துள்ள பொதுபலசேனா, கடந்த
மார்ச் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு நகரில் முஸ்லிம்களால்
நடத்தப்படும் இறைச்சி வியாபாரத்தை குறி வைத்து மேற்கொண்ட எதிர்ப்பு
நடவடிக்கை படுதோல்வியில் முடிந்திருக்கிறது.
கொழும்பு தெமட்டகொட, பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மடுவத்தை நோக்கி அன்றைய
தினம் அதிகாலை 5.30 மணியளவில் 10 பெளத்த பிக்குகளும் அவர்களது ஆதரவாளர்கள்
15 பேரும் வருகை தந்தனர். பொதுபலசேனா வினர் தம்மோடு கூடவே சில
ஊடகவியலாளர்களையும் அழைத்து வரத் தவறவில்லை.
மடுவத்திற்கு வருகை தந்த பொதுபலசேனாவினர் இரு குறிக்கோள்களைக் கொண்டிருந்தனர்.
ஒன்று, மடுவத்தில் அறுவைக்காக கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாடுகளைக்
கைப்பற்றுவது, இரண்டாவது, அங்கிருந்து லொறிகள் மூலமாக வெளிப்புறங்களுக்கு
விநியோகிக்கப்படவிருக்கும் இறைச்சிகளைக் கைப்பற்றுவது.
மேற்சொன்ன இரண்டு விடயங்களும் இங்கு சட்டவிரோதமான முறையில் நடைபெறுகின்றன என்பதே பொதுபலசேனாவின் வாதமாகும்.
கொழும்பு நகரில் பல கசினோக்களும், இரவு விடுதிகளும், விபச்சார விடுதிகளும்
மிகப் பகிரங்க மாகவே இயங்கி வருகின்றபோதிலும் தெமட்டகொட மடுவம் மாத்திரம்
பொதுபலசேனாவின் கண்களுக்குத் தெரிந்தமைக்குக் காரணம் அது முஸ்லிம்
வர்த்தகர்களால் நடத்தப்படுவது என்பதேயாகும்.
பொதுபலசேனா அமைப்பினர் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பல
கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் தாக்கு தல்களையும் நடத்தியுள்ளனர்.
இந்த ''ஒபரேஷன் தெமட்டகொட''யும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது
வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமேயாகும்.
தெமட்டகொட மடுவத்தில் சட்டவிரோதமான முறையில் மாடுகள் அறுக்கப்படுவதாக
பெப்ரவரி 28 ஆம் திகதி பொதுபலசேனாவுக்கு தகவல் கிடைத்ததையடுத்தே மறுதினம்
இந்த ஒபரேஷனை அவர்கள் நடத்தியதாக தெரியவருகிறது.
குறித்த மடுவத்தில் பணியாற்றுவோரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைப்பதே
பொதுபலசேனாவின் திட்டமாகும். அதனால் தான் தமது ஒபரேஷனை உலகறியச் செய்து
நற்பெயரைச் சம்பாதிப்பதற்காக தம்முடன் ஊடகவியலாளர்களையும் கூடவே அழைத்து
வந்திருந்தனர்.
அன்றைய தினம் பொதுபலசேனாவின் பேச்சாளராக விளங்கிய ஆனந்த தேரோ என்பவர்,
குறித்த மடுவத்தில் இளம் கன்றுகள் இறைச்சிக்காக அறுக்கப்படுவதாகவும் உரிய
சுகாதாரமற்ற வகையில் இங்கு மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சிகள்
வெளியிடங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் ஊடகங்களிடம் குற்றச்சாட்டுக்களை
முன்வைத்தார். தரம் குறைந்த இந்த இறைச்சிகளால் உடல் நலத்துக்கு கேடு
விளைவதாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார். அத்துடன் மாடுகள் இங்கு
சட்டவிரோதமான முறையிலேயே கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் நின்றுவிடாது, இந்த மடுவத்தை முஸ்லிம்களே நடத்துவதாகவும் இனவாத
குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
தெமட்டகொட மடுவம் கொழும்பு மாநகர சபையால் நிருவகிக்கப்படுகிறது. 1865 ஆம்
ஆண்டு நிறுவப்பட்ட இம் மடுவம் 2004 ஆம் ஆண்டு நவீன வசதிகளுடன் மீளப்
புனரமைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 250 மாடுகளை நிறுத்தி வைக்கக்கூடிய
இடவசதியை இந்த மடுவம் கொண்டுள்ளது.
துரதிஷ்டவசமாக கொழும்பு நகருக்குள் மாடுகள் அறுக்கப்படுவது தடை
செய்யப்பட்டுள்ளது என்பதையும் வெளியிடங்களில் மாடுகளை அறுத்துக் கொண்டு
வரப்படும் இறைச்சிகளை விநியோகிக்கும் தளமாகவே தெமட்டகொட மடுவம் இயங்கி
வருகிறது என்பதையும் பொதுபலசேனா அமைப்பினர் அறிந்திராமை வேடிக்கைக்குரியதே.
கொழும்புக்கு வெளியே அறுக்கப்படும் இறைச்சிகள் கொண்டு வரப்பட்டு தேவையான
இடங்களுக்கு விநியோகிப்பதற்கான களஞ்சியசாலையாகவும் விநியோக நிலையமுமாகவே
தெமட்டகொட மடுவம் அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.
இங்கு கொண்டு வரப்படும் இறைச்சிகள் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளால்
பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு அவற்றின் தரம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே
கொழும்புக்குள் விநியோகிக்கப் படுகின்றது.
அத் துடன் கொழும்பு நகருக்குள் மாத்திரம் வாராந்தம் 20,000- முதல் 25,000
கிலோ இறைச்சி தேவைப்படுகிறது என் பதும் இங்கு குறிப் பிட் டுக் காட்ட
வேண் டிய தக வ லா கும்.
இங்கு மாடுகள் அறுக்கப்படுவதில்லை என்பதும் குறித்த இடம் களஞ்சியசாலையாக
மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது எனும் விடயமும் பொதுபலசேனாவுக்கு அங்கு
வந்த அரை மணி நேரத்தின் பின் ன ரே தெரியவந்தது. இதனால் அதிருப்தியுற்ற
பொதுபலசேனாவினர் வேறு தந்திரோபாயத்தைக் கையாண்டனர்.
அங்கு இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு வந்திருந்த ஆறு லொறிகளை அவர்கள்
சோதனையிட்டனர். அவை மதவாச்சிய, மருதங்கடவெல, கெக்கிராவ, கல்கமுவ, உடப்பு
மற்றும் பிங்கிரிய ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்தவையா கும். இந்த 6
லொறிகளிலும் சுமார் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 15,000
கிலோ இறைச்சி கொண்டு வரப்பட்டிருந்தது.
உடனடியாக மடுவத்தின் வெளிப்புறக் கதவை மூடிய பொதுபலசேனாவினர் வாகனங்கள்
அங்கிருந்து வெளியேறாதவாறு தடைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, மடுவத்தின்
வெளிப்புறமாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும்
நடத்தினர்.
பொதுபலசேனாவினரின் இந்த நடவடிக்கை தொடர்பில் ஏலவே அறிந்திருந்த தெமட்டகொட
பொலிஸார் ஓரிரு நிமிடங்களுக்குள்ளேயே அங்கு வந்து சேர்ந்தனர்.
ஆனால் கொழும்பு மாநகர சபை அதிகாரிகளுக்கும் பொதுபலசேனாவினர் இது பற்றி
முறைப்பாடு தெரிவித்தபோதிலும் அவர்கள் அதனைக் கணக்கெடுக்கவில்லை. மாநகர சபை
அதிகாரிகள் அங்கு வருவதற்கு மறுப்புத் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த
பொதுபலசேனா, மாநகர சபை தமக்கு ஒத்துழைப்புத் தரவில்லை எனவும் மாநகர சபையின்
மேயராக முஸ்லிம் ஒருவர் இருப்பதே காரணம் எனவும் ஊடகவியலாளர்களிடம்
முறையிட்டனர்.
பின்னர் பொலிஸாரின் உதவியுடன் பொது பலசேனாவினர் இறைச்சிகளை ஏற்றி வந்த
லொறிகளைச் சோதனையிட்டபோது அவர்களுக்கு இன்னுமொரு அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் இறைச்சி விநியோகம் செய்பவர்கள் அதற்குத் தேவையான சகல சட்ட ரீதியான
ஆவணங்களையும் தம்மிடம் வைத்திருந்தமையாகும். லொறிகளில் ஏற்றி வரப்பட்ட
இறைச்சிகள் அவ்வப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பொதுச்
சுகாதார மருத்துவ அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டே
இருந்தன. அத்துடன் சுற்றுச் சூழல் பொலிஸாரும் அவற்றுக் கு அனுமதி
வழங் கி யிருந்தார்கள். இறைச்சியை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக் கும்
பொலிஸாரிடமிருந் து உரிய அனுமதி முன்கூட்டியே பெறப்பட் டி ருந் த து. அந்த
வகையில் அவற்றில் எந்த ஒரு பகுதியிலேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளை
இனங்காண முடியவில்லை.
இதனையடுத்து இந்த இறைச்சிக்கான மாடுகள் எங்கிருந்து பெறப்பட்டன என
பொதுபல சே னாவின் பிக்குகள் வினவினர். அதற்கு பதிலளித்த கெக்கிராவையைச்
சேர்ந்த இறைச்சி விநியோகஸ்தரான மொஹமட் ஹனீபா, இறைச்சிக்கான மாடுகளை தாம்
சிங்கள பண்ணையாளர்களிடமிருந்தே கொள்வனவு செய்ததாகக் கூறினார்.
ஆனால் பொதுபலசேனாவினர் உண்மையை ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இறைச்சி
விநியோகஸ்தர்களின் ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என தொடர்ச்சியாக
வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள்.
இதற்கிடையில் முஸ்லிம் இறைச்சி வர்த்தகர்கள் உட னடி யா க முஸ்லிம்
அர சி யல் வா தி க ளுக்கு இது பற்றி அறி வித் தார்கள். அவர்கள் உட ன டி யாக
பாது காப்புச் செய லா ளரின் கவ னத் திற்கு கொண்டு வந் த தை ய டுத்து
உட ன டி யாக உயர் மட்ட பொலி ஸ் குழு ஒன்று அங்கு வருகை தந் தது. அத் துடன்
கொழும்பு மாந கர சபை அதி கா ரி களும் அங்கு வருகை தந் தனர்.
விசேட பொலி ஸ் குழு வி னரும் மாந கர சபை அதி கா ரி களும் அவ் ஆவ ணங் களைப்
பரீட் சித்துப் பார்த் து விட்டு அவை அனைத்தும் சட் ட ரீ தி யா னவை
என் பதை உறு திப் ப டுத் தினர்.
இதனால் மீண்டும் மூக் கு டை பட்ட பொது ப ல சே னா வினர் இறைச் சி களை
பாது காப் பாக வைத் தி ருக்கும் குளி ரூட் டிகள் இயங் க வில்லை என
மற் றொரு புதிய குற் றச் சாட்டை முன் வைத் தனர். ஆனால் மாந கர சபை
அதி கா ரி களும் மிருக வைத் திய அதி கா ரி களும் முன் வந்து பிக் கு க ளை
அழைத்துச் சென்று குளி ரூட் டி களை திறந்து காட்டி அவை நன் றாகவே
தொழிற் ப டு கின் றன என் பதை நிரூ பித் தனர். இறைச் சி களும்
பாவ னைக் கு கந் தவை என் பதை அவர்கள் பிக் கு க ளுக்கு எடுத்துக் கூறினர்.
பிக் குகள் தமது மூக் கு களை காவி யு டையால் மறைத்துக் கொண்டே அவற்றை
சோத னை யிட் டனர். அவர் களால் எந் த வித குறை க ளையும் அங்கு கண் ட றிய
முடி ய வில்லை.
தாம் தொடர்ச் சி யாக இந்த மடு வத்தையும் கள ஞ் சி ய சா லை யையும் இறைச்சி
விநி யோக முறை யையும் ஆவ ணங் க ளையும் பரி சோ திப் ப தா கவும் அவற்றில்
எந் த வித பிழை களும் இல்லை எனவும் மாந கர சபை அதி கா ரிகள் அங்கு
தெரி வித் தனர்.
இத னை ய டுத்து இந்த நிலையம் சம் பந் த மான ஆவ ணங் களை தாம் பரி சோ திக்க
வேண்டும் என பிக் குகள் வற் பு றுத் தினர். சில இடங் களில் குறை பா டுகள்
இருப் ப தாக அவர்கள் வாதிட் டனர். இரு ப் பினும் மாந கர சபை அதி கா ரிகள்
உரிய விளக் கங் களை அளித் தனர்.
இறு தி யாக இந்த இடத்தில் எந்தவித குறை க ளையும் பிடிக்க முடி யாது என் பதை பொது ப ல சே னா வினர் விளங்கிக் கொண் டனர்.
''''இது வி ட ய மாக ஏதேனும் ஆட் சே ப னைகள் இருந் தி ருந்தால் நீங்கள்
எம்மை முன் கூட் டியே தொடர்பு கொண்டு விளக் கங் களை கோரி யி ருக் கலாம்.
அதை வி டுத்து இவ் வாறு இங்கு அத் து மீறி நுழைந்து தேவை யற்ற
பிரச் சி னை களை ஏற் ப டுத் து வது ஏற்றுக் கொள்ளக் கூடி ய தல்ல
என் பதையும் இது இறைச்சி விநி யோ கஸ் தர் களை அவ மா னப் ப டுத்தும்
செயல்'''' எனவும் மாந கர சபை அதி கா ரிகள் சுட் டிக் காட் டினர்.
இத னை ய டுத்து உயர் மட்ட பொலிஸ் அதி கா ரி கள் இந்த இடத்தில் சகல
விட யங் களும் சட் ட ரீ தி யா கவே உள்ளன எனும் தக வலை பாது காப்புச்
செய லா ள ருக்கு அறி வித்தனர். அத னை ய டு த்து பொது ப ல சே னா வி னரை
அங் கி ருந்து வெளியேறு மாறு பாது காப்புச் செய லாளர் பொலிசார் மூல மாக
உத் த ர விட்டார்.
மூக் கு டை பட்ட நிலையில் அங் கி ருந்து அகன்று செல் வ தைத் தவிர
பொது ப ல சே னா வி ன ருக்கு வேறு வழி யி ருக் க வில்லை. ஆனால் தமது
செயல் க ளுக் காக மன் னிப்புக் கேட்கும் மனப் பாங்கு கூட அவர் க ளிடம்
இருக் க வில்லை என் ப துதான் கவ லைக் கு ரி யது.
அங் கி ருந்து வெளியே றும் போது தமக்கு இந்த ஆவ ணங் களில் திருப்தி இல்லை
என வும் பொலிசார் மேல திக விசா ர ணை களை மேற் கொள்ள வேண்டும் எனவும்
கோரி க்கை விடுக்க அவர்கள் தவ ற வில்லை.
ஈற்றில் காலை 11 மணியளவில் பொது பல சேனாவின் ''தெம ட கொட ஒப ரேஷன்'' முடி வுக்கு வந் தது.
பொது ப லசேனா அமைப்பு எந் த ளவு தூரம் முஸ் லிம் க ளுக்கு எதி ரான
செயற் பா டு களை மேற் கொள் கி றது என் ப தற் கு இந்த சம் பவம் நல்ல
உதா ர ண மாகும்.
இந்த புதிய ''இன மத பாசி ஸ வா தம்'' தொடர்ந்தும் முன் னேறிச் செல்ல
அனு ம தி ய ளிக் கப் ப டு ம ானால் அதன் விளை வுகள் இந்த நாட்டில் மிகப்
பார தூ ர மா கவே அமையப் போகின் றன என் பதை சொல் லித்தான் தெரி ய வேண்டும்
என் ப தில்லை.
from: vidivelli |
No comments:
Post a Comment